இன்ட்ராக்ட் கிளப்பான viriksha என்ற கிளப்பின் "புதிய நிர்வாகிகள்" பதவி ஏற்கும் விழா
கடந்த 28. 9 . 23 அன்று நமது மிட்டவுன் ரோட்டரி கிளப் ஸ்பான்சர் செய்த இன்ட்ராக்ட் கிளப்பான viriksha என்ற கிளப்பின் "புதிய நிர்வாகிகள்" பதவி ஏற்கும் விழா செஞ்சேரி மலையில் அமைந்துள்ள முருகன் கோவிலில் நடைபெற்றது. இவ்விழாவில் viriksha பள்ளி மாணவர்கள் அனைவரும் அந்த மலையை சுற்றிலும் உள்ள குப்பைகளை பிளாஸ்டிக் பண்டங்களை அகற்றி சுத்தம் செய்தனர் பின்பு உலவர் பணி மேற்கொண்டு சேவை செய்தனர் அதன் தொடர்ச்சியாக அந்த வளாகத்தில் "புதிய நிர்வாகிகள்" தேர்ந்தெடுக்கும் விழாவினை மாவட்ட ஆளுநர் டாக்டர் சுந்தர்ராஜன் அவர்கள் தலைமையில் நடத்தினோம். இதில் மாவட்ட நிர்வாகிகள் உட்பட நமது கிளப்பின் உறுப்பினர்கள் virikshaa பள்ளியின் ஆசிரியர்கள் என பலரும் திரளாக கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக பத்துக்கு மேற்பட்ட மரங்கள் நட்டு அதனை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டோம். மேலும் விழாவின் முத்தாய்ப்பாக மாணவர்கள் பெருஞ்சலங்கை ஆட்டம் கோயிலின் வளாகத்தில் நிகழ்த்தினர். நமது சங்கத்தின் சார்பாக ரொட்டேரியன்கள் விஜயன் , அருணாச்சலம், வினோத், கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.